Tuesday, September 25, 2012

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் மாபொரும் எதிர்ப்புப் பேரணி; பெரதேனியாவில் ஆரம்பம்

Uthayan     
news
இலவசக் கல்வியையும் கல்விச் சுதந்திரத்தையும் வெற்றிக்கொள்வதற்கு அணித்திரள்வோம் எனும் தொனிப்பொருளில்
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்ப்பாட்டில் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி பெரதேனியா பல்கலைக்கழகத்தில் இன்று காலை ஆரம்பமாகியது.

தனியார் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்காதே உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த அனைத்து மாணவர்களுக்கும் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி வழங்கு போன்ற கோரிக்கைகளை தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறு மாணவர்கள் பேரணியில் கலந்து கொண்டுள்ளனர்.

இன்று ஆரம்பமான இந்த எதிர்ப்பு பேரணி எதிர்வரும் 28ம் திகதி கொழும்பை வந்தடையவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி கொழும்பு பிரதான வீதியை அடைந்துள்ள பேரணி இன்று மாவனெல்லை வரை முன்னெடுக்கப்படவுள்ளது.


 





No comments:

Post a Comment