Wednesday, December 5, 2012

கைது செய்யப்பட்ட மாணவர்களில் ஒருவர் மட்டும் விடுதலையான பின்னணி என்ன: ஒற்றுமையை சிதைக்கும் முயற்சியா?
[ செவ்வாய்க்கிழமை, 04 டிசெம்பர் 2012, 02:28.02 PM GMT ] tamilwin.net
பயங்கரவாதக் குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தைச் சேர்ந்த கணேசமூர்த்தி சுதர்சன் என்ற மாணவன் இன்றைய தினம் விடுவிக்கப்பட்டுள்ளார்.
யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் ஒற்றுமையைச் சீர்குலைப்பதற்கும் மாணவர்களை பிரித்து விடுதலை உணர்வை சிதைப்பதற்கு இராணுவத்தினர் மேற்கொள்ளும் செயற்பாடுகளின் ஒரு அலகே இந்த விடுதலையாகும்.
குறிப்பாக இந்த முயற்சிகளில் பல்கலைக்கழக துணைவேந்தர் போராசிரியர் வசந்தி அரசரட்ணத்தோடு, பீடாதிபதி ஒருவர் இம்முயற்சிகளில் ஈடுபட்டடுள்ளதாக தெரியவருகின்றது.

தேசிய விடுதலையில் தம் இன்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்காக யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்ட மாவீரர் தினக் கொண்டாட்டங்களைத் தொடர்ந்து, மாணவர்கள் மீது சிங்கள இனவாத அரசு காட்டுமிராண்டித்தனமான இனவெறித் தாக்குதல்களை மேற்கொண்டது.
இதன் தொடர்ச்சியாக பல்கலைக்கழக மாணவாகள் நால்வர் பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு வவுனியாவிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இம்மாணவர்களின் கைது நடவடிக்கைகளுக்கு துணைவேந்தர் துணை போயுள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.
மாவீரர் தினத்தில் மாணவர்கள் அஞ்சலி செலுத்துவார்கள் என்று எதிர்வு கூறலுடன் இருந்த அரச பயங்கரவாதம், யாழ்ப்பாணத்தில் இருந்து துணைவேந்தரை குறித்த காலப்பகுதியில் வெளியேற்றியுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக துணைவேந்தரோடு பதிவாளர் உள்ளிட்ட அடுத்த பதவி நிலை அதிகாரிகளும் வெளியேற்றப்பட்டுள்ளனர். தமது பதவிகளுக்கு அஞ்சியே இவர்கள் அரச பயங்கரவாதத்துடன் இணைந்து பணியாற்றுவதாகவும் குற்றஞ்சாட்டப்படுகின்றது.

இது தவிர மாணவர்களுடன் நல்லுறவைப் பேண வேண்டிய ஒரு சில குறிப்பிட்ட போராசிரியர்கள், மாணவர்களையும் அவர்கள் தொடர்பான விபரங்களையும் புலனாய்வாளர்களுக்கு போட்டுக் கொடுப்பவர்களாக மாறியுள்ளதாகவும் மாணவர்களால் குற்றஞ்சாட்டப்படுகின்றது.
மேலும் பயங்கரவாதத் தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஒரு பீடத்தைச் சேர்ந்த மாணவனை மட்டும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாகத் குறித்த ஒரு பீடாதிபதியினால் முன்னர் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவன் விடுதலையானதும் தமது பீட மாணவர்கள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடக் கூடாது என்றும் அவர் மாணவர்களோடு பேரம் பேசியுள்ளார். இதன் அடிப்படையிலேயே இம்மாணவன் மட்டும் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்று தெரியவருகின்றது.

தேசிய விடுதலை வித்தினை காலத்திற்கு காலம் விதைத்து ஈழத்தின் விடுதலைத் தீயினை விதைத்து வந்த பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள விடுதலை உணர்வினைக் கண்டு அஞ்சி நடுங்கும் அரசாங்கத்தின் கபடத்தனமாக ஒரு சித்து விளையாட்டின் ஒரு அங்கமாகவே இவ்விடுதலையானது அமைந்துள்ளது.

இதன் மூலம் மாணவர்களின் ஒற்றுமையை சிதைப்பதோடு விடுதலைக்காய் ஒன்று சேரும் உணர்வுகளையும் சக்திகளையும் பலவீனப்படுத்ம் செயற்பாடாக இது அமைகின்றது.

இந்நேரத்தில் தமது கதிரைகளுக்காக இவ்வாறான இழிவான செயலில் ஈடுபடும் அதிகாரிகள் தமது இச்செயற்பாடுகளை விடுத்து உணர்வோடு தமிழ் மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்படுகின்றது.

ஆனால் இதற்குள்ளும் எந்தவிதமான அச்சுறுத்தல்களுக்கும் அடிபணியாமல் தேசிய உணர்வோடு பெருமளாவான விரிவுரையாளர்களும் போராசிரியாக்ளும் பணியாற்றுகின்றனர்.அவர்களில் சிலர் மாணவர்களை விடுவிக்க கோரி இன்று நடைபெற்ற போராட்டத்திலும் பங்கேடுத்தனர். பங்கு கொள்ள முடியாத ஏனையவர்கள் தமது ஆதரவையும் வழங்கினார்கள்.
தேசிய உணர்வுகளைச் சுமந்தவர்களாய் மாணவர்களோடு இவ்வாறானவர்கள் கரம் கோர்த்துள்ளனர். ஒரு சில நாணற் புற்களுக்கும் புல்லுருவிகளுக்கும் முன்னால் உள்ள ஆலமரங்களைப் போன்ற போராசிரியர்களின் ஒத்துழைப்புகளுக்கு தலை வணங்குகின்றோம்.

No comments:

Post a Comment